< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
கரூர்
மாநில செய்திகள்

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
30 Oct 2022 7:06 PM GMT

அரசு பஸ் மோதி மூதாட்டி பலியானார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையத்தை சேர்ந்த மலையப்பன் மனைவி மருதாயி(வயது 70). இவர் நேற்று அதிகாலை காருடையாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த அரசு பஸ் முன்பு சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திக்கொண்டு சென்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மருதாயி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மருதாயியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள கீழக்காரகோட்டையை சேர்ந்த டிரைவர் சண்முகசுந்தரம்(44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்