< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் முதியவர் படுகாயம்

தினத்தந்தி
|
27 May 2022 6:38 PM GMT

சாலை விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

நொய்யல்,

வேட்டமங்கலம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கிருபைநாதன் (வயது 77). .இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி ஈரோடு வீரப்பன்சத்திரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கிருபைநாதன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சந்தோஷ் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்