< Back
மாநில செய்திகள்
கட்டிலில் இருந்து தள்ளியதால் முதியவர் சாவு; மகன் மீது வழக்கு
அரியலூர்
மாநில செய்திகள்

கட்டிலில் இருந்து தள்ளியதால் முதியவர் சாவு; மகன் மீது வழக்கு

தினத்தந்தி
|
15 July 2023 6:29 PM GMT

தா.பழூர் அருகே கட்டிலில் இருந்து தள்ளியதால் முதியவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ந் தேதி காலை வீட்டில் இருந்தபோது கோபாலின் இளைய மகன் சாமிநாதன் (40) மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை கோபால் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் சாமிநாதனுக்கும் அவரது தந்தை கோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது கோபால் கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சாமிநாதன் அவரை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த கோபாலை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கோபால் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து தந்தையை தள்ளிவிட்ட சாமிநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்