< Back
மாநில செய்திகள்
குருபூஜைக்கு சென்ற வாகனம் மோதி முதியவர் சாவு
சிவகங்கை
மாநில செய்திகள்

குருபூஜைக்கு சென்ற வாகனம் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
11 July 2023 6:45 PM GMT

குருபூஜைக்கு சென்ற வாகனம் மோதி முதியவர் இறந்தார்

இளையான்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவிற்காக சாலை கிராமத்திலிருந்து பல்வேறு வாகனங்களில் இளையான்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்தநேரம் சிறுபாலை கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தன் என்ற கூலு(வயது 75) என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் மீது குருபூஜைக்கு சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து அறிந்த சிறுபாலை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சுந்தன் உடலை வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக கச்சாத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த கவாஸ்கரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்