< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
|24 April 2023 6:45 PM GMT
ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி முதியவர் பலி
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது70). இவர் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து ஆக்கர் கடையில் விற்பனை செய்து வந்தார். ேநற்று முன்தினம் இரவு ஆரல்வாய்ெமாழி அருகே வீரமார்த்தாண்டன்புதூரில் 4 வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் செல்லத்துரை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்லத்துரை படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சப் - இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், ெசல்லத்துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.