< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி முதியவர் உடல் சிதறி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாகனம் மோதி முதியவர் உடல் சிதறி சாவு

தினத்தந்தி
|
12 April 2023 9:06 PM GMT

தக்கலை அருகே வாகனம் மோதி முதியவர் உடல் சிதறி சாவு

தக்கலை,

தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முதியவர் உடல் சிதறி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் விரைந்து வந்து உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அந்த முதியவர் குறித்து விசாரணை நடத்திய போது, அவருக்கு 65 வயது இருக்கும் என்றும், கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்