< Back
மாநில செய்திகள்
வேடசந்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வேடசந்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
1 April 2023 8:45 PM GMT

வேடசந்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி அருகே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயத்துடன் சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்