< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
8 Sep 2022 8:27 PM GMT

நாகர்கோவிலில் வாகனம் மோதி முதியவர் பலி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது67). இவர் சம்பவத்தன்று வெட்டூர்ணிமடம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுயம்பு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்