< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி முதியவர் சாவு
மதுரை
மாநில செய்திகள்

அரசு பஸ் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
7 July 2023 7:59 PM GMT

அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ரெயில்வே கேட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 63). இவர் தனது வீட்டின் அருகில் சைக்கிள் பஞ்சர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாடிப்பட்டி ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக தனது சைக்கிளில் பாண்டியராஜபுரத்தில் இருந்து புறப்பட்டு வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-மதுரை மெயின் ரோட்டில் பாலதண்டாயுத கோவில் பிரிவு முன்பாக திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் பலத்த காயம் அடைந்தார். .உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்