< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தினத்தந்தி
|
27 Jun 2022 10:07 PM GMT

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

களியக்காவிளை:

குழித்துறை அடுத்த திரித்துவபுரம் பஸ் நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் பிணத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மடிச்சல், பூவன்விளையைச் சேர்ந்த கபிரியேல் (வயது 75) என்பதும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், விஷம் குடித்து விட்டு பஸ் நிறத்தத்தில் அமர்ந்ததும், சிறிது நேரத்தில் இறந்ததும் தெரியவந்தது. இறந்த கபிரியேலுக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்