< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தினத்தந்தி
|
21 Jun 2022 5:18 PM GMT

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் அரசகுளம் மேலவிளையை சேர்ந்தவர் நேசய்யன்(வயது 65), தொழிலாளி. இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவருக்கும், இவருடைய மனைவி மேரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நேசய்யன், வீட்டின் அருகில் உள்ள வாழைத்தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்ட உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டா்கள் நேசய்யன் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் ஜெகன்(33) கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்