< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தினத்தந்தி
|
4 Jun 2022 2:47 PM GMT

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையபெருமாள்(வயது 83). கூலித்தொழிலாளி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு இளையபெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்