< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 20 காசுகள் உயர்வு  450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 450 காசுகளாக நிர்ணயம்

தினத்தந்தி
|
14 Aug 2022 1:40 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 450 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.91-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஆடி மாதம் முடிவுக்கு வருவதால் தமிழகத்தில் முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்