< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

தினத்தந்தி
|
6 July 2023 8:38 PM GMT

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மல்லாங்கிணறு மில்காலனி மற்றும் அயன்ரெட்டியப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட் உத்தராவ் கலந்து கொண்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்