< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
1 April 2023 6:45 PM GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் (ஏப்ரல்) வருகிற 6-ந் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட உடன்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கயத்தாறு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே மேற்கண்ட நாட்களில் தங்கள் பகுதியில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்