< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
17 March 2023 9:36 PM GMT

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டி உள்ளிட்ட மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் கோடைகாலம் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் ஏற்படும் திடீர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்