< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் கோட்ட அளவிலானமின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் கோட்ட அளவிலானமின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
31 March 2023 6:45 PM GMT

விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.


விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் நடக்கிறது. அதன்படி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கும், கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

எனவே மின் நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்