< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு- இளம்பெண் கீழே தள்ளியதில் கணவர் சாவு- கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு- இளம்பெண் கீழே தள்ளியதில் கணவர் சாவு- கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை

தினத்தந்தி
|
24 Aug 2023 8:26 PM GMT

குடிபோதையில் தகராறின் போது கீழே தள்ளி விட்டதில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குடிபோதையில் தகராறின் போது கீழே தள்ளி விட்டதில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு

மதுரை புதுராம்நாடு பழைய மீனாட்சி நகரை சேர்ந்தவர் மகாராஜா (வயது 34), பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி(26), அந்த பகுதியில் ரேஷன் கடையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகாராஜா தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வருவது வழக்கம். மேலும் அவர் குடிபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தாக கூறப்படுகிறது. அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தன்னை அடிக்க வந்த கணவரை செல்வி தடுத்து தள்ளி விட்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மகாராஜா எழுந்திருக்கவில்லை.

கீழே தள்ளி விட்டதில் வாலிபர் சாவு

மேலும் அவர் எவ்வித அசைவும் இல்லாமல் கிடந்ததால் செல்வி அதிர்ச்சி அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் மகாராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே மகாராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் மகாராஜாவின் தாய் சுந்தரி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனை கீழே தள்ளி கொலை செய்து விட்டதாக மருமகள் செல்வி மீது புகார் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வியை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்