< Back
மாநில செய்திகள்
சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்..!
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்..!

தினத்தந்தி
|
24 March 2023 4:44 AM GMT

சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் 9 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை மணிப்பூரில் இருந்து வாங்கி சென்னையில் விற்க முயன்றபோது போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.

இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கார், பைக், 4 செல்போன்கள் ஆகியவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இருவரை கைது செய்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் இருந்து போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்