< Back
மாநில செய்திகள்
பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை - உறவினர்கள் வெறிச்செயல்....!
மாநில செய்திகள்

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை - உறவினர்கள் வெறிச்செயல்....!

தினத்தந்தி
|
30 Jun 2022 10:52 AM GMT

திருவண்ணாமலை அருகே பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிரைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது33). தனியார் பஸ் டிரைவர்.

இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி இந்த வழக்கில் இருந்து டிரைவர் முருகன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வீட்டில் இருந்த முருகன் இன்று காலை 7 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாந்தோப்புக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுமியின் உறவினர்கள் டிரைவர் முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். வலியால் துடித்த முருகனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதனால் சிறுமியின் உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்