< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

தினத்தந்தி
|
11 Feb 2023 9:30 PM GMT

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பெருமலை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52), டிரைவர். இவருக்கு திருமணமாகி முத்துமாரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக மனோகரன் சென்னையில் தனியாக தங்கி வேலை செய்து வந்தார். மனோகரனுக்கு ஊரில் சொந்தமாக 2 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அவரது சகோதரர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர், அவரது சகோதரரிடம் தனது நிலத்தை திருப்பி தரக்கேட்டார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவி, பிள்ளைகளை பிரிந்த நிலையில் மனோகரனுக்கு இது மேலும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மனோகரன் விஷம் குடித்து விட்டு தனது நண்பர் ஒருவருக்கு போனில் தெரிவித்தார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் விரைந்து வந்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மனோகரன் பாிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்