< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி

தினத்தந்தி
|
10 Jun 2022 6:03 PM GMT

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி நடந்தது.

காரைக்குடி,

மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் உலக ஓவிய தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஓவிய பயிற்சி முகாம், 17 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் மாவட்ட கலை போட்டிகள் உள்ளிட்டவைகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. இதில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஓவிய பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர், பனை மரம் மற்றும் வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்களை மாணவ-மாணவிகள் வரைந்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வமாக ஓவியங்களை வரைந்தனர். அவை காட்சிப் படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழக கலாசார கலை போட்டிகளும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்