< Back
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 March 2023 7:01 PM GMT

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஜெயராமபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், மகா மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜை, எஜமான் சங்கல்பம், புன்யாகவாஜனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலையில் விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்று, விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும், பின்னர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ அசோக்ஜி தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினார்கள். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், நாட்டாமைகள் மற்றும் ஜெயராமபுரம் 5-வது வார்டு உறுப்பினர் கர்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்