< Back
மாநில செய்திகள்
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
தேனி
மாநில செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

தினத்தந்தி
|
23 Jun 2022 5:22 PM GMT

கம்பத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பத்தை சேர்ந்த மணிமந்திரி மகன் பிரசாத். இவருடைய மனைவி செங்கொடி கோகிலா (வயது 29). இவர்களுக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு பிரசாத் சென்னையில் ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவர் ஒரு மதுபான பாரில் மேலாளராக வேலை பார்ப்பதாக திருமணத்துக்கு பிறகு தெரியவந்தது. பின்னர் பிரசாத் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து தங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கொடி கோகிலா தனது கணவரின் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கொடி கோகிலா பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். தொடர்ந்து அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டியதால் அவர் இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் பிரசாத், மாமனார் மணிமந்திரி, மாமியார் ரத்தினமாலா மற்றும் பிரசாத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பெண் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்