< Back
மாநில செய்திகள்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் காணிக்கை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
21 March 2023 7:57 PM GMT

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

அன்னவாசல் அருகே பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் நேற்று உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவிலின் 6 உண்டியல்களிலும் உள்ள காணிக்கைகளை எண்ணியதில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரமும், தங்கம் 215 கிராமும், வெள்ளி 117 கிராமும் கிடைத்தது. இதையடுத்து, ரொக்கம் வங்கியிலும், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த கோவிலில் வருகிற 26-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் பங்குனி திருவிழா தொடங்குகிறது. விழாவின் போது பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் உண்டியலில் ஏற்படும் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் முன்னதாகவே உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்