< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்- அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்- அமைச்சர் மூர்த்தி பேச்சு

தினத்தந்தி
|
2 July 2023 9:26 PM GMT

நாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

திருப்பரங்குன்றம்,


நாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராமம், நகர்ப்புற மாணவர்கள் புத்தகங்களை தேடி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இனி அந்த நிலை இருக்காது. மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் கொண்டு கலைஞர் நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப்-1, குரூப்-2 தேர்வு, எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நூல்கள் நூலகத்தில் அமைந்துள்ளது. சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரில் கருணாநிதி நூலகத்தை அமைத்தார். அதேபோல மதுரையில் கலைஞர் பெயரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பிரமாண்டமான நூலகத்தை அமைத்துள்ளார்.

உற்சாக வரவேற்பு

வருகின்ற 15-ந் தேதி கலைஞர் நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நூலக திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்ககூடிய வரவேற்பு நிகழ்வானது பெரும் மாநாடுபோல அமையும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும். பிரதமர் யார்?என்று கைநீட்டக் கூடியவராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 தொகுதியிலும் தி.மு.க.போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது உரிமை. தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதேசமயம் தலைவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முடிவில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ.நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்