< Back
மாநில செய்திகள்
தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம்

தினத்தந்தி
|
4 April 2023 6:45 PM GMT

திருப்பாலப்பந்தலில் தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் கிராமத்தில் தி.மு.க. சார்பில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரியாஅன்பு, ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், மேற்பார்வையாளர் ஏ.ஆர்.எஸ். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சரளாதிருமால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.தமிழக அரசின் சாதனைகளால் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேருவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து 234 தொகுதியிலும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் தான் உறுப்பினர் சேர்க்கையில் முதலிடம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளாகணேஷ், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, விஜய்ஆனந்த், ஒன்றிய துணை செயலாளர் தணிகாசலம், மாவட்ட பிரதிநிதி கே.ஆர்.பி.பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாங்கியம் அய்யனார், கூவனூர் அய்யனார், அரும்பாக்கம் அய்யனார், ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுரங்கம், ராமதாஸ், ஜோதி, வக்கீல் சிவகுமார், குருமூர்த்தி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்