< Back
மாநில செய்திகள்
2015 -விட தற்போது அதிக  மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு: முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின்
மாநில செய்திகள்

2015 -விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு: முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 Dec 2023 5:41 AM GMT

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயலாற்றும் கட்சி என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னையில் திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதவாது:

  • திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.
  • கொரோனா காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி போய் உதவியது .
  • 2015- ஆம் ஆண்டு, முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • 2015-ல் ஏரியை திறக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.
  • 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்து இருப்பார்கள்.
  • 2015 விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு.
  • தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும்.
  • மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினரே தமிழக அரசை பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்