< Back
மாநில செய்திகள்
தேமுதிக கொடிகளை முழு கம்பத்தில் பறக்க விட வேண்டும்- பிரேமலதா அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தேமுதிக கொடிகளை முழு கம்பத்தில் பறக்க விட வேண்டும்- பிரேமலதா அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Jan 2024 1:12 PM GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

"தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்