< Back
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

தினத்தந்தி
|
28 Dec 2022 6:58 PM GMT

விருதுநகரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியை கல்லூரி நிர்வாக குழு செயலர் சர்ப்பராஜன் தலைமையில் தொழிலதிபர் இளங்கோ தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்காக நடைபெற்ற இரட்டையர் இறுதி போட்டியில் சிவராம் -செந்தில்குமார் அணி முதல் பரிசையும், செந்திக்குமார நாடார்கல்லூரியை சேர்ந்த பிரேம் சங்கர் -நாகராஜன் அணி 2-வது பரிசையும், சுரேஷ் ராம்குமார் -யோகேஸ்வரன் பாலாஜி 3-வது பரிசையும் பெற்றனர். திறந்தவெளி இரட்டையர் பிரிவில் சிவகாசி எம்.சி.எம்.சி. அணியை சேர்ந்த கதிர்வேல் -செல்வா முதலிடத்தையும், விருதுநகர் விக்கி அணியை சேர்ந்த சரவணன் -ரமேஷ் அணி 2-வது இடத்தையும், குமார்- கார்த்திக் 3-வது இடத்தையும் பெற்றனர். இளையோர், மூத்தோர் கலப்பு இரட்டையர் பிரிவில் மணி அணியினர் முதலிடத்தையும், ஸ்ரீராம்- செபஸ்டியன் 2-வது இடத்தையும் பெற்றனர். மகளிர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒய்.ஆர்.டி.வி. ஜனனி முதல் இடத்தை பெற்று சிவ முருகன் கோப்பையை தட்டி சென்றார். எம்.ஜி.ஜி. மலர் வித்யா 2-வது இடத்தை பிடித்தார். ஆடவர் 19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் எஸ்.பி.கே. பேட்மிட்டன் அணியை சேர்ந்த அசோக்குமார் முதல் இடத்தை பிடித்து பிரித்தி மதிப்பிரகாஷ் நினைவு சுழற் கோப்பையை வென்றார். 2-வது இடத்தினை ரமணா பிரித்திவி மற்றும் சூர்யா தட்டிச் சென்றனர். உடற்கல்வித்துறை இயக்குனர் டாக்டர் முருகேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறை தலைவர் டாக்டர் பழனிவேல், டாக்டர் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்