< Back
தமிழக செய்திகள்

கோப்புப்படம்
தமிழக செய்திகள்
தமிழ்நாடு தீயணைப்பு துறையின் செயல்பாடுகளில் அதிருப்தி - சிஏஜி அறிக்கையில் தகவல்

12 Oct 2023 10:20 PM IST
தமிழ்நாடு அரசின் தீயணைப்பு துறையின் செயல்பாடுகள் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
சென்னை,
கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு அரசின் தீயணைப்பு துறையின் செயல்பாடுகள் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. 26 மாவட்டங்கள் தீ தடுப்பு குழுக்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன என்றும், தீயணைப்பு துறையில் அதிக எண்ணிக்கையில் காலி இடங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தளவாடங்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருந்தபோதிலும் கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட நிதியில் 55 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.