< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் ஆடு மேய்ந்ததால் தகராறு: விவசாயிக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தோட்டத்தில் ஆடு மேய்ந்ததால் தகராறு: விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
17 Dec 2022 6:01 PM GMT

வடகாடு அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்த தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டு

வடகாடு அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 50), விவசாயி. இவருடைய வீட்டின் அருகே பெரியதம்பி (58) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பெரியதம்பி தோட்டத்தில் ஆரோக்கியசாமியின் ஆடுகள் மேய்ந்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பெரியதம்பி அரிவாளால் ஆரோக்கியசாமியை கழுத்தில் வெட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால் ஆரோக்கியசாமி தனது இடது கையால் அதனை தடுக்க முற்பட்ட போது, அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், பீதியடைந்த பெரியதம்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து, பலத்த காயமடைந்த ஆரோக்கியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணக்கன்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியதம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆடு மேய்ந்த தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்