< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
மீன்பிடி திருவிழாவில் தகராறு
|16 July 2022 5:48 PM GMT
மீன்பிடி திருவிழாவில் தகராறு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற இருந்தது. இவ்விழாவில் பங்கேற்க சிலர் முன் பணம் கட்டாமல் மீன் பிடிக்க கண்மாயில் இறங்கியதாக கூறப்படுகிறது.
அதனை கண்ட விழா கமிட்டியினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் கமிட்டியினரை தாக்கி விட்டு கண்மாயில் இறங்கி மீன் பிடித்துள்ளனராம்.
இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.