< Back
மாநில செய்திகள்
கடலூர் அருகே  வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்த 3 பேர் மீது வழக்கு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்த 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
25 May 2022 4:52 PM GMT

கடலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லிக்குப்பம்,

ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் தவமணி. அதே பகுதியை சேர்ந்த தமிழ், மனோஜ், ரமேஷ் ஆகியோர் தவமணியின் நண்பர்கள் ஆவார்கள்.

சில நாட்களாக இவர்களுடன் பழகுவதை தவமணி தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ், மனோஜ், ரமேஷ் ஆகியோர் தவமணி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது தாய் கவுரியை மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தமிழ், மனோஜ், ரமேஷ் ஆகியோர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்