< Back
மாநில செய்திகள்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
5 July 2023 8:40 PM GMT

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் அருகே சந்திரகிரபுரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள பகுதி தூர்ந்து போய் மேடேறி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர். ஆதலால் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்