< Back
மாநில செய்திகள்
கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
மாநில செய்திகள்

கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
11 Sep 2024 4:18 PM GMT

கீழடியில் நடைபெறும் 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும் நிலையில், தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்டபோது, சுமார் 2 அடி ஆழத்தில் சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 சென்டி மீட்டர் நீளமும், 23 சென்டி மீட்டர் அகலமும், 6 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்