< Back
மாநில செய்திகள்
பேரிடர் மேலாண்மை பயிற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி

தினத்தந்தி
|
25 Jun 2022 2:52 PM GMT

வாட்டாகுடியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார் . துணைத் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் பேரிடர் மாவட்ட பயிற்றுனர் மணிமேகலை மற்றும் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்