< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
14 Aug 2023 9:58 PM GMT

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகள் மற்றும் இன்னல்களை களைந்திட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வருகிற 21-ந் தேதி பகல் 12 மணிக்கு நடக்கிறது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்