< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு
|17 Aug 2023 8:08 PM GMT
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் சவுந்தரராஜபட்டி தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம் குறித்து கேட்டுள்ளார். அப்போது முத்துக்கிருஷ்ணன் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே முத்துக்கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.