< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க பணி ஆணை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க பணி ஆணை

தினத்தந்தி
|
22 March 2023 7:04 PM GMT

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க பணி ஆணை வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள வீடுகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளதால் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்