< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: விருதுநகர்  மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: விருதுநகர் மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
6 Sep 2023 8:37 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை சாலையில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், வத்திராயிருப்பு.

ஆபத்தான பயணம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்கி படிக்கட்டு பயணத்தை தவிர்க்க உதவ வேண்டும்.

வெற்றி, சிவகாசி.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர், ஸ்ரீவில்லிபுத்தூா்.

மேற்கூரை அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா புத்தூர் மயான எரிமேடை மேற்கூரை இடிந்து காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் சடங்குகள் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிராஜ், புத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் நகர் பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன், விருதுநகர்.

மேலும் செய்திகள்