< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
1 Oct 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் அழகுநாச்சிபுரத்தில் பெரிய சிறுதல் கண்மாய் இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

துறை பாண்டி, அழகுநாச்சிபுரம்.

குப்பைகள் அகற்ற வேண்டும்

சிவகங்கை-தொண்டி சாலையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மணி மண்டபம் அருகே உள்ள அரசு இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும்.

குமார், ராகினிபட்டி.

கொசு தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேல் கொசு மருந்து அடிக்கவில்லை. டெங்கு போன்ற தொற்று நோய் பரவுவதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும். அஜீஸ்கான், தேவகோட்டை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கையில் இருந்து சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சிவகங்கை.

பொதுமக்களுக்கு இடையூறு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை துரத்துவதுடன் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், காரைக்குடி.

மேலும் செய்திகள்