< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
14 May 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நகர் புதிய பஸ் நிலையம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் சேரந்தை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், சேரந்தை.

கூடுதல் பஸ்கள் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை ஊராட்சி மேலேந்தல் கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரு.முதுகுளத்தூர்.

பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் நகர் பகுதியில் சில இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், ராமநாதபுரம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகேஷ், கீழக்கரை.

Related Tags :
மேலும் செய்திகள்