< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
19 Feb 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுப்புற பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன், கமுதி, ராமநாதபுரம்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே நகர் பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம், ராமநாதபுரம்

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகருக்குட்பட்ட பகுதியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் சரியான தூக்கமின்றி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் அவதியடையும் சூழல் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

கோபிநாத், பரமக்குடி, ராமநாதபுரம்

போக்குவரத்து இடையூறு

ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் வாகனஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சீரான போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதுராமன், ராமேசுவரம்.

சேதமடைந்த உறைகிணறு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நென்மேனி பகுதியில் வைகை ஆற்றுப்படுகை அருகே உள்ள குடிநீர் சேமித்து வைக்கும் உறைகிணறு சேதமடைந்து அதன் சுவர் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அதில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தண்ணீரை மாசுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய உறைகிணறு அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மகேந்திரன், நென்மேனி, ராமநாதபுரம்

Related Tags :
மேலும் செய்திகள்