< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
10 Sep 2022 8:17 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த குடிநீர்த்தொட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கற்பகநகரில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர்த்தொட்டி சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் களைச்செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.

அருள்மொழிவர்மன், திருமங்கலம்.

பள்ளி மாணவர்கள் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து தேனூர், அலங்காநல்லூர், நகரி வழியாக அழகர்கோவிலுக்கு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யங்காளை, மாலைப்பட்டி.

மயானபாதை ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டயம்பட்டி பொது மயானத்திற்கு செல்லும் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் மயானத்தில் உள்ள குளியல் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை பராமரிக்க வேண்டும்.

தேவா, கொண்டயம்பட்டி.

ஒளிராத தெருவிளக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஜடாமுனி கோவில் கிழக்கு 2வது தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவுநேரங்களில் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்கி வருகிறார்கள்.. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசன், மதுரை.

சேதமடைந்த சாலை

மதுரை மாநகராட்சி தெப்பக்குளம்-ரெயில்வே கிராஸ் உள்ள அனுப்பானடி மெயின்ரோடு சேதமடைந்து மேடு பள்ளங்களாக உள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

அன்புமணி, தெப்பக்குளம்.

Related Tags :
மேலும் செய்திகள்