< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
16 Aug 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிக்கடி ஏற்படும் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வண்ணாங்குன்டு

தேங்கி நிற்கும் மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் இஸ்மாயில் சாகிப் பஜார் தெருவில் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து செல்ல வழியின்றி தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல் நாசர், ஆர்.எஸ்.மங்கலம்,

நாய்கள் தொல்லை

ராாமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பலர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், பரமக்குடி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மடைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கண்மாயிலிருந்து விவசாயத்திற்கு நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மழைக்காலத்திற்கு முன்பாகவே சேதமடைந்த கண்மாய்களின் மடைகளை சீரமைக்க வேண்டும்.

வெற்றிவேல், ஆர்.எஸ்.மங்கலம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் நகர் மற்றும் புறவழிச்சாலையில் விடுமுறை தினங்கள் மற்றும் காலை மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலை, ராமநாதபுரம்.

Related Tags :
மேலும் செய்திகள்