< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

தினத்தந்தி
|
8 Aug 2022 4:04 PM GMT

பாணாவரம் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த திடீர் நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிமாத தீமிதி திருவிழா கடந்த 5-ந்் தேதி தொடங்கியது. இதனையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள், கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்