< Back
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
18 March 2023 7:24 PM GMT

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவையொட்டி தினமும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சியையொட்டி கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வந்து தீக்குழிக்கு சுற்றி, அதன் பின்னர் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்