< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகேமலை தேனீக்கள் கொட்டி பெண் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகேமலை தேனீக்கள் கொட்டி பெண் சாவு

தினத்தந்தி
|
19 Jan 2023 6:45 PM GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பிள்ளை கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் விவசாய தோட்டத்தில் கிடக்கும் தென்னை மட்டைகளை எடுக்க சென்றார். அப்போது தென்னை மட்டையை எடுத்தபோது திடீரென பறந்து வந்த மலைத்தேனீக்கள் கூட்டம் சரஸ்வதியை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் கொட்டியது.

இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்