< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  கியாஸ் கசிந்து தீயில் கருகி முதியவர் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் கியாஸ் கசிந்து தீயில் கருகி முதியவர் சாவு

தினத்தந்தி
|
20 Oct 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் கியாஸ் கசிந்து தீயில் கருகி முதியவர் சாவு

நாமக்கல் அருகே உள்ள தூசூரை அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியை சேர்ந்தவர் காயம்பு (வயது 75). இவர் தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி இரவு ஆம்லேட் போடுவதற்காக வீட்டில் உள்ள கியாஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து உள்ளார்.

சிலிண்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் தீயை பற்ற வைத்ததால், தீ அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த காயம்பு நேற்று சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்